வாஸ்து - கடை/தொழிற்சாலை

வாஸ்து - கடை/தொழிற்சாலை

ஆண்டாள் வாஸ்துவின் விதியானது வீடு, கடை, தொழிற்சாலை அனைத்திற்கும் பொதுவானது. இருப்பினும் கடை/தொழிற்சாலையை அமைக்கும்போது தெரு எந்தப் பக்கம் இருப்பினும் ஒவ்வொருவரும் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

  1. கடை / தொழிற்சாலைக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள்கள் வைக்கும் இடம்/திசை அறிதல் வேண்டும்.
  2. விற்பனைக்கு தயாரான பொருட்களை வைக்கும் இடம்/திசை அறிதல் வேண்டும்.
  3. தலைமை அலுவலக அறை அமையும் இடம்/திசை அறிதல் வேண்டும்.
  4. பணியாளர்களுக்கான தங்கும் இடம்/திசையை அறிதல் வேண்டும்.
  5. கடை/தொழிற்சாலைகளுக்கான கழிப்பறை அமைக்கும் இடம்/திசை அறிதல் வேண்டும்.
  6. இயற்கைக்கு உடன்பட்ட தொழிலாக இருப்பது அவசியம்.
  7. வணிகத்தில் பெருவெற்றி பெற தகுந்த/உகந்த பணியாளர்களை அமர்த்துவது அவசியம்.

குறள்:

எப்பொருள் எத்தன்மைய தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

அதுபோல, ஒரு விஷயத்தை படித்தோ, கேள்விப்பட்டோ முழுமையாக செய்ய இயலாது.

எவ்வாறு ஒரு கருத்தை தெளிவுபடுத்த குரு அவசியமோ, அதைப்போல வீடு/கடை/தொழிற்சாலையை ஒரு ஆண்டாள் வாஸ்து நிபுணரின் உதவியோடு அமைத்து வாழ்வில் வெற்றி காண்பீர்.