இயற்கை பரிகாரங்கள்

இயற்கை பரிகாரங்கள்

வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளும் ஆண்டாள் வாஸ்துவுக்குப் பொருந்தாது .

இருப்பினும், கீழ்க்கண்ட உபாயங்களை பின்பற்றினால் நலம் பயக்கும்.

இயற்கைப் பரிகாரங்கள்

  1. இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும். பெண்களை மதித்து அவர்களின் பெயரில் தொழில் செய்யலாம்.
  2. பெற்றோர்/உடன்பிறந்தோரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம்.
  3. நல்ல வழியில் சம்பாதித்தல் வேண்டும். கண்டிப்பாக வட்டி தொழில் கூடாது.
  4. மாற்றுதிறனாளிகளுக்கு உதவ வேண்டும்.
  5. அடுத்தவரைப் பற்றி அவதூறு பரப்புதல் கூடாது.
  6. ஏழைக்கு பசியாறுதல், கல்வி அளித்தல், திருமண உதவி செய்தல் நலம்.
  7. பசு, நாய் வளர்த்தல், காக்கைக்கு எள் அளித்தல் நன்மை பயக்கும்.